தமிழிசைக்கு குற்றப் பரம்பரையின் வரலாறு தெரியுமா.. மன்னிப்பு கேளுங்கள்.. கருணாஸ் ஆவேசம்!
Recommended Video
சென்னை: குற்றப் பரம்பரையின் வரலாறு தெரியாமல் ஒரு சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்தை வெளியிட்டுள்ள தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த செய்தியை டிவிட்டரில் டேக் செய்த தமிழிசை சவுந்திரராஜன், குற்ற வழக்கு இல்லை, நான் கற்ற பரம்பரை. குற்ற பரம்பரை அல்ல. கணவரும் அவ்வாறே. வீண் வதந்தி? தோல்வி பயம்? எதற்கு என்ற ரீதியில் தமிழிசை தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... அதான் வந்தீங்களே.. ஏன் எதுவும் செய்யலை.. சீமான் பொளேர் கேள்வி
ஜாலியான் வாலாபாக்
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 68 சமூக மக்களைப் பிரித்து குற்றப் பரம்பரை சட்டம் கொண்டு வந்து அதன் கீழ் இவர்களைக் கொண்டு வந்தனர் வெள்ளையர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வராமல் இருந்த மாயக்காள் உள்ளிட்ட பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 பேரை போலீஸார் குருவி சுடுவது போல சுட்டுக் கொன்றனர். பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடந்த அந்த கொடூர சம்பவம் தென்னகத்து ஜாலியான் வாலாபாக் என்று வர்ணிக்கப்படுகிறது.
திமுக மீது தமிழிசை புகார்
இந்த நிலையில் தமிழிசை குற்றப் பரம்பரை என்று கூறி போட்ட டிவீட் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இதையடுத்து தனது பதிவுக்கு தமிழிசை அதே டுவிட்டரில் விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் குடும்பம்
அதில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்ற அமர்வின் இடையே தி.மு.க வினர் எனது கணவரையும், குடும்பத்தினர் மீது வீண் அவதூறு பரப்பும் வகையில் அவர் தன் குற்ற வழக்குகளையும், வருமானத்தையும் மறைத்ததாக பொய்யான புகாரை அளித்த போது எனது கணவர் புகழை கெடுக்கும் விதத்தில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் குற்றபரம்பரை என நான் குறிப்பிட்டது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பம், ஊழல் பரம்பரை, ஊழல் விஞ்ஞானிகள் பற்றித்தான். ஆனால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்கள் என கொண்ட நான் என்றும் போற்றும் பரம்பரை பற்றியென வழக்கம்போல் திரித்துக்கூறும் தி.மு.கவினரை கண்டிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
அவமானம்
இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என திருவாடானை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவருமான கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் குற்ற பரம்பரை என்பதன் வரலாறு தெரியாமல் குறிப்பிட்டு அவமானப்படுத்திவிட்டார்.
கருணாஸ் கோரிக்கை
தமிழகத்தின் வரலாறு தெரியாமல் தமிழிசை இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழிசை கற்ற பரம்பரை அல்ல, தமிழகத்தின் உரிமையை விற்ற பரம்பரை. எனவே தமிழிசை தான் செய்த பதிவிற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் கருணாஸ்.