சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பரிந்துரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். முதல்வராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக இரு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது ஒன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேசியது மற்றொரு மணிகண்டன் குறித்து கருணாஸ் எம்எல்ஏ புகார் மனு.

மதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்?.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ?.. கராத்தேமதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்?.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ?.. கராத்தே

அக்ஷயா கேபிள்

அக்ஷயா கேபிள்

அரசு கேபிள் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை விமர்சித்து மணிகண்டன் பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் அக்ஷயா கேபிள் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார்.

பகிரங்கம்

பகிரங்கம்

அதில் சுமார் 2 லட்சம் இணைப்புகள் உள்ளது என்றும் அந்த கேபிள்களை அரசு கேபிளுடன் அவர் இணைப்பாரா என மணிகண்டன் கேள்வி எழுப்பியிருந்தார். இது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை என அவர் மீது புகார் இருந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், தான் அந்தத் தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

நான்தான் காரணம்

நான்தான் காரணம்

இந்த இரு காரணங்களுக்காகவே மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாடாணை எம்எல்ஏ கருணாஸ் கூறுகையில் அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு நான்தான் காரணம்.

அமைச்சர்

அமைச்சர்

நான்தான் முதலில் அவர் குறித்த புகாரை அளித்தேன். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

English summary
Karunas MLA says if Jayalalitha is alive, i will become as Minister. He is also the reason for removal of Manikandan from TN Cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X