சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ. கட்டி காத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமையாக்கியாச்சு.. அடுத்து தமிழகம்தானே.. நடக்காது.. ஜோதிமணி

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமையாக்கும் பணியை எடப்பாடி பழனிச்சாமி இனிதே முடித்துவிட்டார் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.

சென்னையில் இரு நாட்கள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அவருக்கு பாஜக- அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நேற்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழா நடந்தது.

Karur MP Jothimani criticises CM Edappadi palanisamy

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும், அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் கூட்டணி குறித்து பகிரங்கமாக அறிவித்தனர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அரசு விழாவில் பாஜகவுக்கு பயந்து கொண்டு இது போன்று கூட்டணி அறிவிப்பை யாராவது செய்வார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Karur MP Jothimani criticises CM Edappadi palanisamy

இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எம்ஜிஆர்,ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை பிஜேபிக்கு அடிமையாக்கும் பணியை இனிதே முடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.. மொத்தம் 3 கோரிக்கை அமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.. மொத்தம் 3 கோரிக்கை

அடுத்து தமிழகத்தை அடிமையாக்க கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காதென கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் நிரூபித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் அதுவே நடக்கும் என தெரிவித்துள்ளார்.

English summary
Karur MP Jothimani says that CM Edappadi Palanisamy made ADMK as slave to BJP as the party was grown by MGR and Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X