"பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க".. கஸ்தூரி ஏடாகூட டிவீட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நடிகை கஸ்தூரி மோசமாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அறிவுஜீவி போல தன்னை காட்டிக்கொண்டு எதையாவது ட்வீட் போட்டால் இப்படித்தான் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு உட்கார வேண்டும்! இது கஸ்தூரிக்கு அடுத்த பாடம்!
நேற்று 20-20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா - சென்னை அணிகள் விளையாடின. கொல்கத்தா அணி 109 என்ற இலக்கை அடைந்தது.
இதையடுத்து சென்னை அணி விளையாட ஆரம்பித்தது. ஆனால் நிதானமாக விளையாடி கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை சென்னை எடுத்திருந்தது.
கருத்துக் கணிப்பு முக்கியமில்லை... இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை... தம்பிதுரை
|
என்னய்யா இது
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, ஒரு ட்வீட் போட்டார். அதில், "என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல
வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க" என்று பதிவிட்டார்.
கொதிப்பு
இதுதான் நெட்டிசன்களின் கொந்தளிப்புக்கு காரணம். அதாவது சிஎஸ்கே ரசிகர்கள் ஒரு பக்கம், அதிமுக தரப்பினர் மறுபக்கம் என கொதிப்பாகிவிட்டர்கள். அதனால் உடனடியாக கஸ்தூரிக்கு பதிலடி தர ஆரம்பித்தனர்.
பாஜக அதிகம் நம்பும் கோவை.. மீண்டும் வர துடிக்கும் சிபிஐ.. என்ன சிறப்பு தெரியுமா?
|
கண்டனம்
அமைதிப்படை படத்தில் சத்யராஜ், கஸ்தூரிக்கு அல்வா கொடுத்த காட்சியை நிறைய பேர் பதிவிட்டுள்ளதுடன், சத்யராஜ் உன்ன தடவினது போல தானே??? என்று பதிலுக்கு ட்வீட் செய்து கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
|
சென்னை இலக்கு
"இப்படியெல்லாம் பேச வேண்டியது அப்பறம் ராதாரவி இதுமாதிரி போற போக்குல ஏதாவது சொன்னா அப்படியே ரத்தம் கொதிச்சு திட்டுறது மனிதனுடைய டிசைன் அப்படி போல" என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.
அநாகரீகம்
உண்மையிலேயே, அவசரப்பட்டு அவுட் ஆகிவிடாமல், நின்று ஆடி வெற்றி பெற வேண்டும் என்பதே சென்னை அணியின் இலக்காக இருந்தது. ஆனால் இதைக்கூட கஸ்தூரி சரியாக புரிந்து கொள்ளாமல், எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக அநாகரீகமான கமெண்ட்டை அவசரப்பட்டு போட்டுவிட்டார். அதுவும் கொஞ்சமும் கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத எம்ஜிஆர்-லதாவை இழுத்து வந்து கமெண்ட் போட்டதுதான் மகா மட்டமாகி விட்டது!