இப்போதே சுட்டெரிக்கும் வெயில்.. தவிக்கும் மக்கள்.. கத்திரி வெயில் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க இன்னும் சில நாட்களில் வெயில் மிகவும் அதிகமாகும்.
தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் இரண்டாம் வாரத்திலேயே கத்திரி வெயில் போல, தமிழகம் முழுக்க கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது.
நெல்லை, சேலம், கோவை, வேலூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேராக நம் மீது 90 டிகிரியில் விழுவதாகும். இதனால் மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். ஆனால் இந்த கத்திரி வெயில் தொடங்கும் முன்பே பல இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
மிரட்டிய வெயிலை.. விரட்ட வர்றாரு வருணபகவான்... தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி 103 டிகிரி, அடுத்த நாள் 6-ந் தேதி 105 டிகிரி, 29-ந் தேதி 104 டிகிரி வெயில் மிக மோசமாக இருந்துள்ளது. இதே நிலை பல மாவட்டங்களில் நிலவியது.
இந்த வருடம் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் 110 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. இது மக்களுக்கு பெரிய அதிர்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் பிரச்சாரம் செய்ய முடியாமல் வேட்பாளர்களும், கட்சியினரும் தவித்து வருகின்றனர். மக்களும் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.