சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொந்தகை கிராமத்தில் தோண்டப்பட்ட குழி.. ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யம்.. கீழடி ஆய்வில் செம திருப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: கீழடியில் நடந்து வரும் அகழ்வாராச்சியில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு இருக்கும் கொந்தகை கிராமத்தில் தற்போது தீவிரமாக ஆராய்ச்சி நடந்து வருகிறது.

Recommended Video

    கீழடியில் கிடைத்த குழந்தையின் எலும்பு... ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யம்

    மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.

    இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும். கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

    பெரிய தலை.. வித்தியாசமான தோற்றம்.. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால படிமங்கள்.. செம செய்தி! பெரிய தலை.. வித்தியாசமான தோற்றம்.. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால படிமங்கள்.. செம செய்தி!

    இரண்டு உடல்கள்

    இரண்டு உடல்கள்

    இங்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து மேலும் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு நேற்று முதல்நாள் 2 குழந்தைகளின் உடல்கள் கிடைத்தது. கொந்தகை பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு கீழடி ஆய்வில் மொத்தம் 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று முதல்நாள் மீண்டும்

    நேற்று முதல்நாள் மீண்டும்

    நேற்று முதல்நாள் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் இரண்டும் மிக சிறிய உடல்கள் ஆகும். ஒரு உடலின் அளவு 1.05 மீட்டர் மட்டுமே இருந்தது. இன்னொரு உடல் 0.65 மீட்டர் இருந்துள்ளது. இரண்டு உடலும் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உடல்களை விட மிகவும் பழைய உடல்கள் ஆகும். அதில் இருந்த அளவு சதை பகுதி கூட இந்த உடல்களில் காணப்படவில்லை

    என்ன நிலை

    என்ன நிலை

    இந்த உடல்கள் தற்போது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிமு 300-400 ஆண்டுகளை சேர்ந்த உடல்களாக இது இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் மீதான ஜீன் ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்த உடல்களின் பாலினம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விரைவில் இதன் மீதான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.

    முன்பு எப்படி

    முன்பு எப்படி

    முன்னதாக 6வது கட்ட ஆய்வில் இரண்டு உடல்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உடல்கள் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது . இரண்டு உடல்களும் குழந்தைகளின் உடல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு உடல்களும் மிக மிக அருகில் புதைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    English summary
    Keezhadi Civilization: Deep 6th phase research gives new hope on Tamil history.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X