கீழடியில் ஆய்வுகள் தொடரும்.. விரைவில் 6ம் கட்ட ஆய்வு.. தொடங்கி வைக்கும் முதல்வர்.. அதிரடி அறிவிப்பு!
கீழடியில் இதுவரை 5 கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது, விரைவில் 6வது கட்ட ஆய்வுகள் தொடங்கி நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: கீழடியில் இதுவரை 5 கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது, விரைவில் 6வது கட்ட ஆய்வுகள் தொடங்கி நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் பல்வேறு அழுத்தங்களை அடுத்து தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.
என்ன வரலாறு
இதையடுத்து டந்த இரண்டு வாரங்கள் முன்பு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.
என்ன வியப்பு
இது உலகையே வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுவரை கீழடியில் 5 கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் இதோடு முடியாது. அங்கு இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது.
அடுத்து என்ன
அங்கு 6வது கட்ட ஆய்வுகள் தொடர்ந்து கீழடியில் மேற்கொள்ளப்படும். கீழடியில் 6வது கட்ட ஆய்வை முதல்வர் பழனிசாமி துவங்கி வைப்பார். இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்படும்.
எவ்வளவு ஒதுக்கீட்ய்
4 மற்றும் 5ம் கட்ட ஆய்வு பணிகளை செய்ய இதுவரை 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் 6ம் கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.