சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூந்தமல்லி ஹோட்டல் அறையில் படுக்கையில் நிர்வாணமாக கேரள இளைஞர் தற்கொலை.. அறைக்கு வந்த பெண் யார்?

Google Oneindia Tamil News

சென்னை: பூந்தமல்லி அருகே ஓட்டல் அறையில் நிர்வாணமாக கேரள மாநிலத்து இளைஞர் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    ஓட்டல் அறை.. ஆணின் நிர்வாண சடலம்.. மாயமான பெண்… போலீசார் விசாரணை..!

    கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாஜின் (40), கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தவர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்தார்.

    நேற்று முன்தினம் அறைக்குள் சென்றவர் இன்று வரை அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை தட்டியும் திறக்காததால் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஓட்டல் அறை

    ஓட்டல் அறை

    தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி நிர்வாணமாக சாஜின் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    யார் அந்த பெண்

    யார் அந்த பெண்

    விசாரணையில் கடைசியாக அவரது அறைக்கு ஒரு பெண் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் இவர் நிர்வாணமாக படுக்கையில் இறந்து இருப்பதால் தற்கொலை செய்து கொண்டாரா? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பிரச்சினையா

    பிரச்சினையா

    ஏதேனும் பெண்ணுடன் தவறான சகவாசம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு இறந்தாரா? இல்லை அந்த பெண் விலை மாதுவா என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பெண் யார் என்பது குறித்து ஹோட்டல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்கொலை

    தற்கொலை

    நசரத்பேட்டை ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Kerala Youth commits suicide in Nasaratpet Hotel. Police investigation going on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X