சின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டிற்குள் சின்னக்கண்ணன் வந்து விளையாடினர். ஏராளமானோர் தங்கள் வீட்டின் பிள்ளைகளுக்கு கண்ணனைப் போலவும் ராதையைப் போல அலங்கரித்தும் கொண்டாடினர்.
சென்னை: பண்டிகை காலம் வந்தாலே கொண்டாட்டம்தான் அதுவும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே கேட்கவே வேண்டாம் நம் வீட்டு பிள்ளைகளுக்கு. அன்றைய தினம் அவர்கள்தான் ஹீரோக்கள். கண்ணனைப் போல அழகாய் அலங்கரித்து கொண்டாடுவார்கள். விதம் விதமான பலகாரங்களை ருசிக்கலாம். இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் வீட்டுப்பிள்ளைகளை கிருஷ்ணனைப் போல அலங்கரித்து ஜென்மாஷ்டமியை கொண்டாடினர்.
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் சிறையில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். கடவுள் அவதாரம் எல்லாமே மனிதர்களை காப்பதற்காகத்தான். கம்சனை அழிப்பதற்காக மட்டுமே கண்ணனின் அவதாரம் நிகழவில்லை. பாண்டவர்களுக்கு உதவி செய்யவும், பல ஆயிரக்கணக்கான கோபியர்களுக்கு முக்தி கொடுக்கவும் அவதரித்தவர் கண்ணன்.
கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு மயங்கிப்போய் இருக்கிறது இந்த உலகம். குட்டிக்கண்ணன் குறும்புக்காரன் மட்டுமல்ல வெண்ணெய் திருடித்தின்றவன், மண்ணைத்தின்று அம்மாவிடம் அடி வாங்கியதோடு இந்த உலகமே தன்னுள்தான் இருக்கிறது வாயை திறந்து காட்டி
யசோதை அன்னையை மயக்கமடையச் செய்தவன் கண்ணன்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
அந்த கண்ணன் செய்த லீலைகளை சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதனால்தான் கண்ணனின் அவதார தினம் ஜென்மாஷ்டமியாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்களில் பெரிய அளவில் கொண்டாடப்பட விட்டாலும் அனைவரின் வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா களைகட்டியது.
கண்ணன் பிறந்தான்
கண்ணன் பிறப்பு கொண்டாடப்பட வேண்டியது என்பதால்தான் நம்முடைய பிள்ளைகளின் பிறந்தநாளைப் போல ஒவ்வொரு தாய்மார்களும் தங்களின் பிள்ளைகளை கண்ணனாக அலங்கரித்து கொண்டாடுகின்றனர்.இதே இந்த கண்ணன் தலையில் மயிலிறகு சூடு உள்ளம் கவர் கள்வனாக காட்சி தருகிறான்.
லீலை செய்யும் கண்ணன்கள்
கண்ணனின் லீலைகளை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம், அப்படித்தான் எங்கள் வீட்டுக்கண்ணனும் என்று அலங்கரித்து இருக்கிறார் ஒரு அம்மா. பாருங்கள் பார்க்க பார்க்க அழகாய் இருக்கிறார் இந்த கண்ணன்.
மயக்கும் குழல் இசை
கண்ணனின் புல்லாங்குழல் இசை அனைவரையும் மயக்க வைக்கும். இதே இந்த கண்ணனும் கோபியர்களை மயக்க கையில் புல்லாங்குழல் வைத்திருக்கிறார்.
செல்லக்கண்ணன்கள்
கண்ணன் போல வேடமிருக்கும் எல்லோருமே செல்லக்கண்ணன்கள். இதே இந்த கண்ணன்கள் ஆடிப்பாடி பாடி எல்லோரையும் மகிழ்விக்கின்றனர். குட்டிக்கண்ணன்களை பார்க்க பார்க்க நமக்கும் மகிழ்ச்சிதானே.
அன்பானவன் கண்ணன்
கண்ணன் அன்பானவன், அமைதியின் சொரூபம். ஐந்து தலை நாகத்தின் மீது நர்த்தனமாடுபவன். இதோ அமைதியாக இங்கே அமர்ந்திருக்கிறான். கண்ணனை பாருங்கள் நீங்களும் கொண்டாடுங்கள்.