வர்லாம் வா.. படையெடுக்கும் "ரெட்" தக்காளிகள்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் செம மழை பெய்யுமாம்!
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடைக் காலமான தற்போது வெயில் வாட்டி எடுக்கிறது. எனினும் அவ்வப்போது வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தென்மாவட்டங்களில் மட்டுமே இந்த மழை பெய்து வருகிறது. சென்னையில் மழையில்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம்பன் புயலால் சென்னையில் லேசான மழை பெய்தது.
மும்பைக்கு ஆபத்து.. ஆக்ரோஷமாக போகும் அரபிகடல்.. மணிக்கு 110 கி.மீ காற்று வீசும்.. புதிய புயலால் பீதி
மழை பெய்யும்
அத்துடன் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தகித்து வந்ததால் சென்னைவாசிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் வெப்பச்சலனம் ஏற்பட்டு இன்னும் 2 அல்லது 3 தினங்கள் கழித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் மழை கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
மேகமூட்டம்
ஆனால் தற்போது அந்த நிகழ்வு முன்கூட்டியே நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையை நோக்கி சிகப்பு தக்காளிகள் வருகின்றன என்றார் வெதர்மேன். சென்னையில் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
வெப்பம்
வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் வெயில் காய்ந்து வந்த நிலையில் லேசான மழையும் பெய்து வருகிறது. அது போல் தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெயிலும் மேகமூட்டமும் மாறி மாறி வருகின்றன.