2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley
அருண் ஜெட்லி மரணம் குறித்து குஷ்பு ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
சென்னை: இந்தியா அடுத்தடுத்து 2 அருமையான தலைவர்களை இழந்துள்ளதாக நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக இன்று பிற்பகல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
நிதியமைச்சராக, சட்டத்துறை அமைச்சராக பல்வேறு பதவிகளை வகித்தவர் அருண் ஜேட்லி. பன்முகம் கொண்ட அவரது மறைவால் பாஜக பெரும் துயரில் மூழ்கியுள்ளது.
குஷ்பு
சமீபத்தில்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணமடைந்தார். இந்த நிலையில் தற்போது அருண் ஜேட்லியின் மறைவுச் செய்தி வந்துள்ளது. இதுகுறித்து நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
|
பெரும் வேதனை
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த ஜென்டில்மேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.
மிஸ் செய்வோம்
இந்தியா நிச்சயம் அவரை மிஸ் செய்யும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.
|
அடுத்தடுத்து இழப்பு
இந்தியா அடுத்தடுத்து 2 அருமையான தலைவர்களை குறுகிய காலத்தில் இழந்துள்ளது. முதலில் சுஷ்மா சுவராஜ். இப்போது அருண் ஜேட்லி. சாகும் வயதில்லை இவர்களுக்கு. அதுவும் குறுகிய காலத்தில் இறந்துள்ளனர். இருவருமே அருமையான தலைவர்கள். மனது சொன்னபடி கேட்டு நடந்தவர்கள் என்று குஷ்பு இன்னொரு டிவீட்டில் இரங்கல் தெரிவித்துள்ளார்.