மிஸ்டர் பிரதமர்.. பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்களே.. வெட்கக்கேடு.. குஷ்பு ட்வீட்
பிரதமர் மோடியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.
சென்னை: பிரதமர் அவர்களே.. பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்களே, வெட்கக்கேடு" என பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
வழக்கமாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருபவர் பிரதமர் மோடி. குறிப்பாக பிரச்சாரத்தின்போது நேரு குடும்பத்தை அளவுக்கு அதிகமாகவே களங்கம் கற்பித்து ஓட்டு கேட்டு வந்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில், ராஜீவ் காந்தி நம்பர் ஒன் ஊழல்வாதியாக மறைந்தார் என்று மோடி பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் வீர் பூமியில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடியும் ராஜீவ் நினைவு நாளுக்கு அஞ்சலி தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார்.
What a joke https://t.co/eGXbVcK6xU.. you humiliated him, abused him, called him names..now tribute?? Ghadi mein thola ghadi mein masha ?? You have been changing your colours faster than a chameleon.. Shame on you. https://t.co/jfSvoDYbqH
— KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) May 22, 2019
இதனை குஷ்பு ட்வீட் போட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார். "இது என்ன கேலிக்கூத்து.. பிரதமர் அவர்களே.. நீங்கள் ராஜீவை அசிங்கப்படுத்தினீர்கள், கேவலமாக விமர்சித்தீர்கள். இப்போது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்களே! பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்கள் பிரதமரே. வெட்கக்கேடு" என பதிவிட்டுள்ளார்.
டிக் டாக்கால் பிரபலமான ஜிம் மாஸ்டர்.. பட்டபகலில் சுட்டுக் கொலை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்