தமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார்? ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா? எல். முருகன் கேள்வி
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா? என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, எல்.முருகன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் எல். முருகன் கூறியதாவது:
கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி வழங்குவதிலும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இதுவரை 96 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27-ந் தேதி பழனியில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, நான் ஆகியோர் காவடி எடுக்க உள்ளோம்.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா? தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கு அருகதை இல்லை. அவரால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா?
பாஜகவில் எந்த ரவுடியையும் சேர்ப்பதில்லை. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் தூண்டிவிடப்பட்ட ஒன்று. விவசாயிகளின் பெயரில் அர்பன் நக்சல்கள்தான் தான் போராடுகிறார்கள். சசிகலா விரைவில் குணமடைய வேண்டும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு முருகன் கூறினார்.