காஞ்சிபுரம் அருகே தென்னேரியில் வெள்ளப்பெருக்கு.. வாலாஜாபாத்- சுங்கவார்சத்திரம் சாலை துண்டிப்பு
Recommended Video
சென்னை: காஞ்சிபுரம் அருகே தென்னேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து வாலாஜாபாத்- சுங்கவார்சத்திரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனது.
இந்த நிலையில் தற்போது ஒரு சில நாட்கள் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியதை அடுத்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் பெரும்பாலான ஏரிகள் 50 சதவீதம் அதிகமான அளவில் நிரம்பிவிட்டன.
தொடர் மழை.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை
இன்று முதல் மழை பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. எனினும் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரத்தில் கனமழை பெய்ததன் எதிரொலியாக ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பிவிட்டன. அது போல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஏரிகள் நிரம்பின.
ஏரிகள் உடைப்பு
காஞ்சிபுரத்தில் உள்ள ஜம்போடை, கூத்தவாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தென்னேரியில் அதிக நீர் வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு
இதனால் வாலாஜாபாத்- சுங்குவார்சத்திரம் சாலை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராம மக்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.