லலிதா ஜுவல்லரி கொள்ளை.. தொடர்ந்து டிமிக்கி கொடுக்கும் முருகன்.. உறவுக்கார பெண் அதிரடி கைது!
Recommended Video
சென்னை: லலிதா ஜுவல்லரி கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் முருகனின் உறவுக்கார பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் முருகன் தலைமறைவாகி இருக்கிறார். இன்னொரு முக்கிய குற்றவாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார் .
என்ன உறவினர்
இந்த நிலையில் முருகனின் உறவினர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இன்று காலை முருகனின் இன்னொரு உறவினரான ராஜேஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி நெருக்கம்
முருகனுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் இவர். இவரை தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். முருகன் அடிக்கடி இந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.
எத்தனை பேர்
இதுவரை முருகனின் உறவினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் 2 பேர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நான்கு பேரிடம் இருந்து கொஞ்சமான நகைகளையே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நகை எங்கே
ஆனால் 30 கிலோ நகையில் இன்னும் முழுதாக எல்லா நகையும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதிக அளவு நகையை முருகன்தான் மறைத்து வைத்துள்ளார். அவரை கைது செய்தால், நகைகளை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது எவ்வளவு மொத்தம்
இந்த திருட்டு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் கொள்ளையர்கள் என்று பார்த்தால் 2 பேர்தான். மற்ற எல்லோரும் கொள்ளையர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவுக்குள் முருகன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.