Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள், இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உடனடியாக விண்ணப்பித்தால் மட்டுமே துணைப் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது.

Tamil Nadu Assembly Election 2026 Election Commission voter list

தற்போது தமிழகத்தில் மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தகுதி பெற்ற அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், பல்வேறு காரணங்களால் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாமல் போனவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெயர் இடம்பெறாதவர்கள் படிவம்-6 (Form-6) மூலம் புதிய வாக்காளராக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரில் அளிக்கலாம் அல்லது இணைய வழி சேவைகள் மூலம் சமர்ப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தகவலின்படி, இதுவரை மாநிலம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், தங்கள் பெயர் ஏற்கனவே பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய பொதுமக்கள் தேர்தல் ஆணைய இணையதளம் மற்றும் மொபைல் சேவைகள் மூலம் சரிபார்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் இல்லாமல் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்றால் வாக்களிக்க முடியாது என்பதால், முன்கூட்டியே சரிபார்ப்பது மிகவும் அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

தேர்தல் ஆணையம் குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புதிய முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள் என்பதால், இன்னும் பெயர் சேர்க்காதவர்கள் உடனடியாக வாக்குச் சாவடிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொண்டால் மட்டுமே வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தங்களது வாக்குரிமையை செலுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+