சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து லதா ரஜினி காந்த் கோரிக்கை விடுத்தார்,
சென்னை தலைமைச் செயலகத்தில் நடிகர் ரஜினி காந்தின் மனைவி லதா ரஜினி காந்த், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினி காந்த் "குழந்தைகள் பாதுகாப்பில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ, தனி அமைப்பை ஏற்படுத்த முதல்வரிடம் தான் வலியுறுத்தியாக தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு, மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த லதா ரஜினிகாந்த், குழந்தைகளுக்காக அமைக்கப்படும் தனி அமைப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என பலரும் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார்.
காவி சாயம் பூச முடியாது என்று ரஜினிகாந்த் சொல்ல இதுதான் காரணம்.. அர்ஜுன் சம்பத் வித்தியாச விளக்கம்
சுஜித் சம்பவம் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு வேறு பல பிரச்சனைகளும் இப்பதை தான் விளக்கியதாகவும் அப்போது லதா ரஜினி காந்த் தெரிவித்தார்.