காந்தி ஜெயந்தி: டெல்லியில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை.. சென்னையில் ஆளுநர், முதல்வர் அஞ்சலி!
சென்னை : இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் 'காந்தி ஜெயந்தி' என இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தி அன்று டெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
காந்தி ஜெயந்தி : 'வன்முறை தவிர்த்து அமைதியைப் போற்றுவோம்’ - தலைவர்கள் வாழ்த்து!
பிரதமர் மோடி
மகாத்மா காந்தியின் 154வது ஜெயந்தி விழாவையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை செலுத்தினர்.
சோனியா காந்தி
காந்தி ஜெயந்தியையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சென்னையில் முதல்வர், ஆளுநர் மரியாதை
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி
மேலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகள், நினைவிடங்களில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள், மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.