இன்னும் 15 நாள்தான்.. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்துவிடும்.. துணை முதல்வர் ஓ.பி.எஸ் தகவல்!
இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் அடுத்த தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பை வெளியிடலாம்.
இதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருடுகிறது. இந்த நிலையில் இன்று நாங்குநேரி தேர்தல் வெற்றியை அடுத்து நன்றி அறிவிக்கும் கூட்டம் நடந்தது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. அதிமுக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதன் பயனாக நாம் வென்று இருக்கிறோம்.
டெல்லி.. 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.. குடியரசுத் தலைவர் அதிரடி!
தொண்டர்களின் பணி இதில் அளப்பரியது. உங்கள் பணியால் தற்போது அதிமுக வேட்பாளர்கள் வென்று இருக்கிறார்கள். இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது.
அதன்பின் மீண்டும் தேர்தல் பணிகள் தொடங்கும். தொண்டர்கள் தீவிரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.