சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2-வதாக வாக்கப்பட்ட அலி.. நெருங்காமல் தவிர்த்த மனைவி.. ஜன்னல் வழியாக தீ வைத்து கொளுத்தி.. சென்னை ஷாக்

சென்னையில் மனைவி, மகனை எரித்து கொன்ற கணவரை தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: 2வதாக வாக்கப்பட்ட மக்புல் அலி-க்கு மனைவி பேகம் மீது ஏகப்பட்ட சந்தேகம்.. தன்னை வீட்டுக்குள் சேர்க்காததால், ஆத்திரமான அலி, ஜன்னல் வழியாக தின்னரை ஊற்றி மனைவியுடன் சேர்த்து, மகன், மகளுக்கும் தீ வைத்து எரித்துவிட்டார்.. இந்த பயங்கர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் மக்புல் அலி.. இவரது மனைவி கொரோசா பேகம்.. 2 பேருக்குமே 40 வயதாகிறது. கொரோசா பேகத்துக்கு ஏற்கனவே கல்யாணமாகி 21 வயது மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள்.

 lockdown crime: Wife and son burned alive near chennai

4 வருஷத்துக்கு முன்புதான் அலி, பேகத்தை 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. பிறகு கொல்கத்தாவில் இருந்து குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்தார்.. மதுரவாயலில் குடியேறினார்கள்.. தம்பதியும், மகனும், வேலப்பன்சாவடியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அலி சரியாக வேலைக்கு போவதில்லை.. குடிப்பழக்கம் வேறு சேர்ந்து கொண்டது.. தண்ணி அடித்துவிட்டு, பேகம் மீது சந்தேகப்படுவதே இவருக்கு வேலையாகிவிட்டது. அதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டையும், தகராறும் வந்துள்ளது.

இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த பேகம், கணவர் அலியை வீட்டுக்குள் சேர்க்காமல் இருந்துள்ளார்.. 2 மாசமாகவே வீட்டுக்குள் அவரை அனுமதிக்கவில்லை.. இதனால், அலி, 2 மாதமாகவும் சண்டைதான் போட்டு வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்துவிட்டார்.. நேற்று காற்றோட்டத்துக்காக வீட்டின் ஜன்னல் பக்கத்தில் மனைவி, மகன், மகள் எல்லாரும் தூங்கி கொண்டிருந்தபோது அங்கே வந்தார்.. ஜன்னல் வழியாக தின்னர் என்ற எரிபொருளை 3 பேர் மீதும் ஊற்றி, தீயையும் வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

பொதுத்தேர்வு- மாணவர்களின் உயிரோடும், உடல் நலத்தோடும் தமிழக அரசு விளையாட கூடாது: சீமான்பொதுத்தேர்வு- மாணவர்களின் உயிரோடும், உடல் நலத்தோடும் தமிழக அரசு விளையாட கூடாது: சீமான்

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவர்களை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பேகம், மகன் அக்ரம் அலி 13 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.. இந்த சம்பவம் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அலியை தேடி வருகின்றனர்.

English summary
lockdown crime: Wife and son burned alive near chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X