இன்று முதல் கிராமப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் முழுமையாக திறப்பு- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்
சென்னை: தமிழகத்தில் கிராமப்புறங்களில் இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை உட்பட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தபட்டு வருகின்றன. இந்த கட்டுப்பாடுகள் சில இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.
இதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அவை:
17 நாட்களுக்குப் பின் சென்னையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு - இறைச்சி கடைகள் ஹோட்டல்கள் திறப்பு
- கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள் (ஆண்டு வருவாய் ரூ10,000க்கும் குறைவானவை), மசூதிகள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்
- இந்த வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வழிபாட்டு தலங்களில் பொது தரிசன அனுமதி இல்லை
- தொழில், ஏற்றுமதி நிறுவனங்கள் 100% தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
- ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்.
- ஷாப்பிங் மால்கள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
- அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கலாம்
- ஹோட்டல்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடலாம்
- இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
Comments
English summary
Lockdown in Other Districts of Tamilnadu relaxed from today.