சர்காரை தேர்வு செய்ய லைனில் நின்ற விஜய்.. ஆட்டோகிராப் கேட்டு ஓடி வந்த குட்டிஸ்.. திரண்ட கூட்டம்!
Recommended Video
சென்னை நீலாங்கரை புனித தோமையர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்க வரிசையில் நின்ற நடிகர் விஜயிடம், சிறுவர்கள் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் பிரபலங்கள் அதிகாலையே வந்து வாக்களித்தனர். நடிகர் அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் சென்று வாக்களித்தனர். அதேபோல் நடிகர் விஜயும் தனது வாக்குசாவடியில் சென்று வாக்களித்தார்.
சென்னை நீலாங்கரை புனித தோமையர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான் நடிகர் விஜய்க்கு வாக்கு இருக்கிறது. இங்கு வாக்களிப்பதற்காக அவர் அதிகாலை சரியாக 7 மணிக்கே வந்தார். ஆனால் அப்போதே அங்கு பெரிய அளவில் கூட்டம் இருந்தது.

இதனால் நடிகர் விஜய் வரிசையில் நின்றார். வரிசையில் நின்று மக்களோடு மக்களாக வாக்களிக்க காத்து இருந்தார். அப்போது விஜயை காண நிறைய ரசிகர்கள் கூடினார்கள். அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பலர் விஜயை காண அந்த பகுதிக்கு வந்தனர்.

அவர்கள் நடிகர் விஜயிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் விஜயின் ரசிகர்கள் பலரும் அவரிடம் வந்து ஆட்டோகிராப் வாங்கி சென்றனர்.












Click it and Unblock the Notifications