என்ன கொடுமை இது.. ஊருக்குப் போக பஸ் இல்லை... பெருங்களத்தூரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!
சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் வரவில்லை என கூறி பெருங்களத்தூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள்
Recommended Video
சென்னை: சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் வரவில்லை என கூறி பெருங்களத்தூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். இரவு முழுக்க காத்திருந்தும் பேருந்துகள் வராததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.
ஆனால் தமிழகத்தில் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை. வாக்களிக்க செல்லும் மக்கள் பல இடங்களில் போதிய பேருந்து இல்லாமல் கடும் அவஸ்தை பட்டனர்.
கொடூரம்.. போதிய பேருந்து இல்லாமல் தமிழக வாக்காளர்கள் கடும் அவதி.. படிகளில் தொங்கி பயணம்!
இந்த நிலையில் தற்போது பெருங்களத்தூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் வரவில்லை என கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் நேற்று இரவில் இருந்து பெருங்களத்தூரில் பேருந்துக்காக காத்து இருக்கிறார்கள். ஆனால் அப்படி காத்து இருந்தும் கூட இன்னும் ஒரு பேருந்து கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை. இரவு முழுக்க சாலையில் தூங்கி, பேருந்துக்காக இவர்கள் காத்திருந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
இந்த கோபத்தில் இவர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுடன் போலீசார் கடுமையான வாக்குவாதம் செய்து வருவதால் பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.