சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களையும், கடவுளையும் நம்புகிறேன்.. நாளை முதல் பிரச்சாரம் செய்கிறேன்… பவர்ஸ்டார் சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: மக்களையும், கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன் என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் களமிறங்குகிறார். அவருக்கு அயன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Lok Sabha elections 2019: Campaign Start from tomorrow says Power Star Srinivasan

அரசியல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக, நடிகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவரான பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் கால் பதித்து, தற்போது அரசியலில் நுழைந்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கூறியதாவது, தேர்தல் கருத்துக்கணிப்புகளில் என் பெயரை சஸ்பென்சாக வைத்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மூஞ்சியை பாருங்க.. உங்களுக்காக உழைச்சு கருத்து போச்சு.. அதுக்காச்சும் ஓட்டுபோடுங்க.. விஜயபாஸ்கர் பலே மூஞ்சியை பாருங்க.. உங்களுக்காக உழைச்சு கருத்து போச்சு.. அதுக்காச்சும் ஓட்டுபோடுங்க.. விஜயபாஸ்கர் பலே

வேட்பாளராக நிற்க வந்த வாய்ப்பை பயன்படுத்துக் கொண்டேன், செலவு எல்லாம் கட்சியில் பார்த்து கொள்கிறார்கள். எந்த செலவும் என்னது இல்லை. எல்லாமே கட்சி தான் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கட்சியின் தேர்தல் அறிக்கையை வைத்து என்னுடைய பிரச்சார உரை இருக்கும் என்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஜெ.ஜெயவர்தனும், திமுக கூட்டணி சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அமமுக சார்பில் இசக்கி சுப்பையாவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரங்கராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரினும் போட்டியிடுகின்றனர்.

English summary
Actor Power Star Srinivasan has said that I am contesting the election and trust the people and God.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X