கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ.. அங்கு நிற்பேன்.. சூசகமாக சொல்லும் தமிழிசை!
பாஜக தேசிய தலைமை எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு தேர்தலில் நிற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: பாஜக தேசிய தலைமை எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு தேர்தலில் நிற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழக கட்சிகள் எல்லாம் வேகமாக தயாராகி வருகிறது. ஆனால் பாஜக இன்னும் அதுகுறித்து பெரிய அளவில் முடிவுகளை அறிவிக்கவில்லை. இன்று பாஜகவின் தமிழக லோக்சபா வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிமுக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பாமக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அந்த 5 தொகுதிகளில் யார் போட்டி? பாஜக வேட்பாளர் பட்டியல்.. இன்று வெளியாகிறது?
என்ன பேட்டி
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல கட்ட ஆலோசனைக்கு பின் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
யார் இறுதி
இவர்களின் பட்டியல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பாஜக தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. பாஜக தேசிய தலைவர்தான் வேட்பாளர்களை இறுதியாக தேர்வு செய்வார்.
வெற்றி
பாஜக தலைமை என்னை போட்டியிட கூறினால் போட்டியிடுவேன். பாஜக எங்கு சொல்கிறோதோ அங்கு நிற்க தயார். அந்த இடத்தில் கண்டிப்பாக பாஜகவிற்கு வெற்றியை தேடி தருவேன் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
உறுதியாகியுள்ளது
இதன் மூலம் பாஜக சார்பாக லோக்சபா தேர்தலில் தமிழிசை போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் ஒன்றில் இவர் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.
தூத்துக்குடி தொகுதி
இவர் பெரும்பாலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள். லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பாக கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தற்போது தமிழிசை போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள்.