தமிழ்நாடு.. ஸ்டார் வேட்பாளர்களெல்லாம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யப் போகிறார்கள்!
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள் நாளை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்கிறார். இதேபோல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்கிறார்கள்.
ஒன்றா இரண்டா.. எத்தனை மட்ட ரக பேச்சுக்கள்.. ராதா ரவியை துரத்தம் சர்ச்சை
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நாளை வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார்கள்.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கு இதுவரை 254 பேர் மனு தாக்கல் செய்துள்ளார்கள். அதே போன்று 18 சட்டமன்ற தொகுதிக்கு 72 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. நாளை மறுநாள் வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது.