தமிழிசை, ஹெச். ராஜாவை ஆதரித்து பிரச்சாரம்.. ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி
சென்னை: மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை வண்டலூர் அருகே நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஜெ.வை அடித்து உதைத்தவர்களாச்சே.. வெற்றிகொண்டான் பேசாத பேச்சா.. திமுகன்னாலே .. தமிழிசை அதிரடி
இந்த நிலையில், ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி லோக்சபா தொகுதி விவரம் விரல் நுனியில்
பிரதமர் மோடி வருகைக்கு முன்னதாக, ஏப்ரல் 2 ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே, 2 ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.