உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்? இதை படிங்க புரியும்!
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சுற்று வாக்குகளில் வாக்குகள் எண்ணப்படும் என்று விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: நாளை வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சுற்று வாக்குகளில் வாக்குகள் எண்ணப்படும் என்று விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முதல் நாளோடு தேர்தல் நடந்து முடிந்தது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. அதேபோல் மே 19ம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது.
இந்த நிலையில் நாளை காலை லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நிறைய சுற்றுகள் நடக்கும். சில தொகுதிகளில் இரவு வரை வாக்குகள் எண்ணப்படும்.
இந்த சுற்றுகளை தீர்மானிக்க கணக்கு ஒன்று பின்பற்றப்படுகிறது. அதன்படி, உங்கள் தொகுதியில் எத்தனை பூத்துகள் இருக்கிறதோ அதை 14ல் வகுத்து வரும் ரவுண்டுகள்தான் விடை. உதாரணமாக உங்கள் தொகுதியில் 14 பூத்கள் இருந்தால், ஒரு ரவுண்டிலேயே உங்கள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.
இப்படி 14 ஆக பிரிப்பதற்கு காரணம் இருக்கிறது. மொத்தமாக வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இதனால் 14ஐ வைத்து எத்தனை ரவுண்டுகள் நடக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பின் முடிவுகளை கருப்பு பலகையில் எழுதுவார்கள்.
அதன்படி திருவள்ளூரில் 34 சுற்றுகள், தென் சென்னையில் 21 சுற்றுகள், வடசென்னையில் 22 சுற்றுகள், மத்திய சென்னையில் 19 சுற்றுகள், தருமபுரியில் 23 சுற்றுகள் திருச்சியில் 25 சுற்றுகள் , தூத்துக்குடியில் 21 சுற்றுகள், கோவையில் 30 சுற்றுகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் நாளைக்குள் கண்டிப்பாக முழு முடிவு தெரிந்துவிடும் என்று கூறுகிறார்கள்.