என்ன ஒரு குஷி.. மாம்பழங்களை பிழிந்து என்ஜாய்.. அறிவாலயத்தில் பாமக தோல்வியை கொண்டாடிய திமுகவினர்!
லோக்சபா தேர்தலில் பாமக தோல்வி அடைந்ததை திமுக அலுவலகத்தில் திமுக தொண்டர்கள் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
சென்னை: லோக்சபா தேர்தலில் பாமக தோல்வி அடைந்ததை திமுக அலுவலகத்தில் திமுக தொண்டர்கள் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக அசாத்திய சாதனை நிகழ்த்தி இருக்கிறது. மொத்தம் 38 இடங்களில் 37 தொகுதியில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயம் தேசிய அளவில் பாஜக கூட்டணி பெரிய அளவில் வெற்றியை ருசித்து இருக்கிறது. பாஜக கூட்டணி மொத்தம் 360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
திமுக வெற்றி
லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றியை இன்று முழுக்க திமுக தொண்டர்கள் கொண்டாடி தீர்த்தனர். முக்கியமாக சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பலர் மொத்தமாக கூடினார்கள். அங்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டாசு வெடித்தனர்.
பாமக தோல்வி
இந்த லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளில் அனைத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது. முக்கியமாக பாமகவின் முக்கிய வேட்பாளரான அன்புமணி தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கிறார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் அங்கு வெற்றியை அறுவடை செய்து வருகிறார்.
சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்
திமுகவினர் கொண்டாட்டம்
அன்புமணியின் தோல்வியை திமுக பெரிய அளவில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே திமுகவினர் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாம்பழம், மாம்பழம் என்று திமுகவினர் கோஷமிட்டு பாமகவை கிண்டல் செய்தனர்.
|
ஜூஸ்
முத்தாய்ப்பாக, திமுகவினர் எல்லோரும் சேர்த்து அண்ணா அறிவாலயம் வெளியே மாம்பழங்களை நசுக்கி கொண்டாடினார்கள். மாம்பழங்களை தரையில் போட்டு மிதித்து, கையால் கசக்கி, ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடினார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.