தமிழகம் - புதுச்சேரியில் 1,500 வேட்புமனுக்கள் தாக்கல்… இன்று பரிசீலனை
சென்னை : 2 ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, நடைபெற உள்ளது.
தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் 6 நாட்களில் 1,500 க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்
கடைசி நாளான நேற்று அமமுக கட்சியினர் உட்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 39 மக்களவைத் தொகுதிகளில் ஆயிரத்து 569 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் 171 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
அதுக்குதான் சொல்றேன்.. வேற ஒருத்தருக்கு ஓட்டு போடுங்கன்னு.. அசத்தல் "நாம் தமிழர் காளியம்மாள்"
மேலும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 74 பெண்கள் உட்பட, 485 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை, 11:00 மணிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. வேட்பு மனுவை வாபஸ் பெற, 29ம் தேதி கடைசி நாளாகும்.
வரும் 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை 5 மணியளவில் 39 மக்களவைத் தொகுதி, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.