நீலகிரியில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இதனால் நீலகிரியில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம், காற்றழுத்த மேலடுக்கு, கீழடுக்கு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைவன் இருக்கிறான்.. 1 வருடம் கழித்து போன மாதிரியே திரும்பி வந்த தோனி.. விமர்சனத்திற்கு பதிலடி!
நீலகிரி
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெறும். இந்த நிலையில் இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திண்டுக்கல்
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடங்குகிறது.
மழை பெய்கிறது
வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதிலும் சென்னையில் வரும் கோடையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க இந்த ஆண்டு பருவமழை மிக அவசியமானதாக உள்ளது.
ஜில் காற்று
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது. இரு தினங்களாக சென்னை ஊட்டி, கொடைக்கானல் போல் ஜில்லென இருப்பதாக வீடுகளில் ஏசிக்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.