தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்புவரை கன மழை கொட்டி தீர்த்தது.
சகோதரிக்கு மாமனாரால் பாலியல் தொல்லை?.. அதான் சுட்டுட்டேன்.. சவுகார்பேட்டை கொலையாளி பரபர வாக்குமூலம்
தூத்துக்குடி மழைப் பொழிவு
தூத்துக்குடி மற்றும் அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய மழைப்பொழிவு பதிவாகி சாதனை படைத்தன.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தற்போது சற்று மழை ஓய்ந்து உள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை
இதன் காரணமாக, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மிதமான மழை
தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென் அரபிக் கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.