கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்... வைரமுத்துவின் நாட்படு தேறல் 3வது முன்னோட்டம் வெளியீடு
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாடல் தொகுப்பின் 3-வது முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் பாடல்கள் திரிந்து போகலாம். ஆனால், தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை என்பது வைரமுத்து கருத்து.
பாடல்கள் இல்லாத வாழ்வு ஓசையில்லாத உலகம் போன்றது; பறவைகள் இல்லாத காடு போன்றது. பாடல்கள் இனிமேல் திரைப்படங்களிலும் இருக்கலாம் அல்லது திரைக்கு வெளியிலும் இருக்கலாம் என்றும் வைரமுத்து கூறியிருந்தார்.
அத்துடன் 100 பாடல்கள்... 100 பாடகர்கள்.. 100 இசையமைப்பாளர்கள்.. 100 இயக்குநர்கள் என்ற திட்டத்துடன் நாட்படு தேறல் எனும் பாடல் தொகுப்பை வெளியிடுவதாகவும் வைரமுத்து அறிவித்திருந்தார். இதன் முன்னோட்டங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் வைரமுத்து.
#நாட்படு_தேறல்#பாடல்கள்_100#Naatpadu_Theral #Songs_100@astrokiru @Vagumazan pic.twitter.com/sdg8FxZ8k7
— வைரமுத்து (@Vairamuthu) February 27, 2021
இன்று நாட்படு தேறலின் 3-வது முன்னோட்டத்தை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில், நாக்கு செவந்தவரே நாலெழுத்து மந்திரியே என்ற பாடலுக்கு இசை அமைத்து பாடியிருக்கிறார் வாகு சமான். இதனை இயக்கி இருப்பவர் கிருத்திகா உதயநிதி என தெரிவித்துள்ளார் வைரமுத்து.