சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி.. அதுக்கு முதல்வராகிடுங்க ஸ்டாலின்.. ஜெயக்குமார் அறிவுரை!

முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி பின் அதன் முதல்வராக தன்னை அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி பின் அதன் முதல்வராக தன்னை அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் கைலாசம் நாடு குறித்த செய்திகள் இணையத்தை மொத்தமாக ஆக்கிரமித்து இருக்கிறது. ஐநாவில் புதிய நாட்டிற்கு அனுமதி அளிக்க கோரி நித்தியானந்தா விண்ணப்பித்து இருக்கிறார். தன்னுடைய தீவுதான் உலகில் முதல் தனி இந்து நாடாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நித்தியானந்தாவின் இந்த தனி தமிழக அரசியலை யும் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இதை வைத்து திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார் .

ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு ரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு

தனி தீவு

தனி தீவு

ஜெயக்குமார் தனது பேட்டியில், முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி முதல்வராக அறிவித்து கொள்ளலாம். ஸ்டாலின் மட்டுமல்ல யார் யார் எல்லாம் முதல்வராக விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் தனி தீவி வாங்கிக் கொள்ளலாம்

என்ன கனவு

என்ன கனவு

தமிழகத்தில் நிறைய பேருக்கு முதல்வர் கனவு இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் முதல்வராகிவிட முடியாது. அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும்.அதிமுகவை சேர்ந்தவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருப்பார்.

ஸ்டாலின் கனவு

ஸ்டாலின் கனவு

ஸ்டாலின் முதல்வர் கனவில் குழம்ப தொடங்கிவிட்டார். அது அவரின் பேச்சிலும் தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாற்றிமாற்றி பேசுகிறார் ஸ்டாலின்.திமுக குழப்பமான கட்சி, அதன் தலைவர் ஸ்டாலின் குழப்பமான நபர்.

குருமூர்த்தி

குருமூர்த்தி

அரசியலில் குருமூர்த்தி கத்துக் குட்டி.அவருக்கு அரசியல் குறித்தும் மக்கள் குறித்தும் ஒன்றே தெரியாது. அவருக்கு அதிமுகவை விமர்சனம் செய்ய தகுதி கிடையாது. குடியுரிமை திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதனால் அந்த மசோதாவை நாங்கள் ஆதரித்து பேசினோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief M K Stalin can buy an island like Nithyananda and become its CM says Jayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X