ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதான 4 அவதூறு வழக்குகள் ரத்து
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் மது கடைகள் தொடர்பான விவகாரத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக ஆளுநர் குறித்து கடந்த 2016 ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அவதூறு கருத்துகள் தெரிவித்துள்ளதாக கூறி தமிழக அரசு சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு- சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், அவதூறு கருத்துகள் அரசு நிர்வாகத்தின் மீதானது இல்லை எனவும் கூறி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரான நான்கு அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி சதீஷ்குமார்.