சின்மயி புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்- மாஃபா பாண்டியராஜன் உறுதி
சென்னை: சின்மயி புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.
பாடகி சின்மயியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்த குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்த #MeToo ஹேஷ்டேக் மூலம் பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குழுவில் மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் இடம்பெறுவர் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் MeToo விவகாரம் தமிழகத்துக்கு தாமதமாக வந்துள்ளது.
[68 வயது விவசாய கூலி தொழிலாளி.. வயிற்றில் ஏறி மிதித்த முதலாளி.. பரிதாபமாக போன உயிர்!]
சின்மயி புகார் தந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல் துறை எடுக்கும் என்று கூறியுள்ளார்.