தென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் துண்டை விரித்துப் போட்டு மெளனமாக காத்திருக்கும் மைத்ரேயன்!
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட மைத்ரேயன் ஆர்வம் காட்டி வருகிறார்.
Recommended Video
சென்னை: இன்னும் ஒரு சில நாட்கள்தான்.. அதற்கு பிறகு எம்பியாக மைத்ரேயன் நீடிப்பாரா, இல்லையா என்பது தெரியவில்லை! ஆனால் தனக்கு ஒரு சீட் எப்படியாவது வேண்டும் என்று துண்டு போட்டு விரித்துள்ளார் மைத்ரேயன்!
இவர் ஒரு பக்கா பாஜகவின் அபிமானி. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவுடன் நல்ல புரிந்துணர்வு தொடர்பு வைத்திருந்தவர்.
தனிப்பட்ட முறையில் அதிக நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா, அதனால்தான் ஏற்கனவே 2 முறை எம்பியாக இருந்த நிலையிலும், கடந்த முறையும் வாய்ப்பு தந்தார். இதனால் பாஜக-அதிமுக கூட்டணிக்கு இடையே ஒரு பாலமாகவும் செயல்பட்டார்.
4-வது முறை வாய்ப்பு?
இந்த நிலையில், விரைவில் பதவி முடிந்து, தேர்தலும் தொடங்க போகிறது. இந்த முறை மைத்ரேயனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. ஆனால் 4-வது முறையும் போட்டியிட மைத்ரேயன் ஆர்வம் காட்டுவதாகவே சொல்லப்படுகிறது.
தென்சென்னை
அதிலும் 2 தொகுதிகளில் ஒன்று கிடைத்தாலும் போட்டியிட ரெடியாகவே இருக்கிறார். ஒன்று தென்சென்னை, மற்றொன்று மத்திய சென்னை. இதில் தென் சென்னை மீது மைத்ரேயனுக்கு ஒரு கண். ஏனென்றால், இது இவரது சொந்த தொகுதி.
வாய்ப்பு குறைவு
ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் சிட்டிங் எம்பியாக இருக்கிறார். திரும்பவும் அந்த தொகுதியில் அவரே நிற்க போவதாக தெரிகிறது. இந்த தொகுதியை தமிழிசை சவுந்தராஜன் கேட்டு பார்த்தும், அதிமுக தலைமை தரவில்லை என்று கறாராக சொல்லிவிட்டது. அதனால் மைத்ரேயனுக்கு இங்கு வாய்ப்பு குறைவுதான் என்பதால், மத்திய சென்னைதான் சாய்ஸ்-ல் உள்ளது.
விருப்ப மனு
எதற்கும் இருக்கட்டுமே என்று தென் சென்னை, மத்திய சென்னை என இரண்டு தொகுதிகளிலுமே விருப்ப மனு தந்திருக்கிறார். இப்போது அதிமுக-பாஜக ரொம்பவும் இணக்கமாகி உள்ளதால் எப்படியும் இவருக்கு இங்கு சீட் தந்து விடுவார்கள் என்றே தெரிகிறது.