தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் திடீர் மாற்றம்.. அரசு அதிரடி!
தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் திடீர் என்று மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் திடீர் என்று மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் யாரையும் மாற்றாமல் இருந்து வந்தது. லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழகத்தில் முக்கிய இடமாற்றம், பொறுப்பு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே பொறுப்பில் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முக்கிய அதிகாரிகள் திடீர் என்று மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி புதிய தமிழக பொதுப்பணித்துறை செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் மணிவாசன் இதற்கு முன் சமூக நலத்துறை செயலாளராக இருந்தார்
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம்.. மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
அதேபோல் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பிரபாகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரபாகர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய சமூக நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுமதி இதற்கு முன் நுகர்பொருள் விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தார். இதனால் நுகர்பொருள் விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக தற்போது கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.