12 லோக்சபா தொகுதிகளில் 3-ஆவது இடத்தில் மக்கள் நீதி மய்யம்! விஸ்வரூபம் எடுத்த கமல்!
Recommended Video
சென்னை: 12 லோக்சபா தொகுதிகளில் 3-ஆவது இடத்தை பெற்றதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக யாருடைய கூட்டணியும் இன்றி களம் கண்டன.
கடைசி இடம்
தமிழகத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர் ஆகிய 11 லோக்சபா தொகுதிகளிலும் புதுவை யூனியன் பிரதேச லோக்சபா தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 4-ஆம் இடத்தில் நாம் தமிழர் கட்சியும் கடைசி இடத்தில் அமமுகவும் இடம் பெற்றுள்ளது.
வாக்கு பிரிப்பு
20 இடங்களில் அமமுக 3-ஆவது இடத்தையும் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3-ஆவது இடத்தையும் 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. அக்கட்சிக்கு ஓட்டே கிடைக்காது என அதிமுக கருதியது. ஆனால் வாக்குகளை அக்கட்சிதான் பிரித்தது.
காலி பெட்டியான பரிசு பெட்டி...!! ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..!!
செயல்பாடு சாதனை
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக ஆகிய 3 கட்சிகளும் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. வெற்றி, தோல்வி என்பது இரண்டாம்பட்சம்தான். இவை மூன்றும் பல்வேறு தொகுதிகளில் 3-இடத்தில் உள்ளது. இது பெரிய சாதனையாகும்.
வாக்கு சதவீதம் அதிகரிக்கும்
எனவே தேர்தலுக்கு பிறகு இந்த 3 கட்சிகளும் புதிய சக்திகளாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தேசிய கட்சியான பாஜக செய்யாத காரியத்தை இந்த மூன்று கட்சிகளும் செய்துள்ளது அளப்பறிய சாதனையாகும். நிச்சயம் இந்த கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.