அனைத்திலும் புதுமையை புகுத்திய மநீம.. 20-இல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. எதிர்பார்ப்பில் தமிழகம்
Recommended Video
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 20-ஆம் தேதி வெளியாகிறது என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக கட்சிகள் அனைத்தும் மும்முரம் காட்டி பணியாற்றி வருகின்றன.
இளைஞர்களுக்கும் மக்களுக்கு நல்லது செய்வோருக்கும் தேர்தலில் வாக்களியுங்கள் என கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார்.
3 நாள் கங்கையில் பயணம்.. பின் வாரணாசியில் கூட்டம்.. அட வித்தியாசமாக பிரச்சாரம் செய்யும் பிரியங்கா!
வேட்பாளர்கள்
மக்கள் நீதி மய்யம் இரு தேர்தல்களிலுமே தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் பொதுவாக ஒரு கட்சியின் சார்பில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே வேட்பாளராக போட்டியிட முடியும்.
கமல் வாய்ப்பு
ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியோ யாருக்கெல்லாம் மக்கள் பணியாற்ற விருப்பம் இருக்கிறதோ அவரெல்லாம் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை அளிக்கலாம் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
அறிவிப்பு
அதன்படி அளித்த வேட்பாளர்களை வித்தியாசமான முறையில் நேர்காணல் நடத்தினார் கமல்ஹாசன். வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்ட நிலையில் கமல்ஹாசன் வரும் 20-ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார் என துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுமை
கட்சி கொடி, கொள்கை, வேட்பாளர் நேர்காணல் ஆகியவற்றில் புதுமையை புகுத்திய கமல் தனது வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்துள்ளார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர்.