'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி
Recommended Video
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் புதுப்பொலிவுடன் காணப்பட்ட மாமல்லபுரம் மறுபடியும் குப்பை கூளமாக மாறிவிட்டது.
கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும், மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டில் சந்தித்தனர். இதையொட்டி 8 தேதி முதலே சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரம் செல்ல தடை விதிக்கப்பட்டு, அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அந்த நகரமே புதுப்பொலிவுடன் மாறியது.
புத்தம் பொலிவுடன் காணப்படும் மாமல்லபுரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை சுற்றுலா பயணிகளுக்கு பெருக்கெடுத்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு!
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாமல்லபுரம் நோக்கி படையெடுத்து சுற்றுலா பயணிகளால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கூட்டம் அலைமோதியது. ஆனால் வருகை தந்த, சுற்றுலா பயணிகள் குப்பைகளை கண்ட இடத்திலும் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
உணவுப்பொருட்கள் மற்றும் பிற குப்பை பொருட்களை குப்பை தொட்டியில் போடாமல், நினைத்த இடத்திலெல்லாம் வீசிவிட்டு சென்றனர். இதனால் இன்றைய தினம் மாமல்லபுரத்தை பார்த்தால், வெறும் குப்பையாக காட்சி அளிக்கிறது.
தூய்மையின் அவசியம் முக்கியம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கோவளம் கடற்கரையில் அவரே குப்பைகளை தூய்மையும் செய்தார். இவ்வளவு, நடந்த பிறகும் நமது மக்கள், ஏதாவது சாக்கு போக்கு சொல்கிறார்களே தவிர, தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதாக இல்லை என்பதற்கு மாமல்லபுரம் ஒரு சாட்சி.