மகளாக நினைக்க வேண்டிய 15 வயது மைத்துனி.. ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த நபர் கைது
சென்னை: சென்னையில் மனைவியின் 15 வயது சகோதரியான பள்ளிச் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் ஜான் பாஷா. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜான் பாஷா மனைவியின் சகோதரி 8-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான சிறுமி அடிக்கடி சகோதரி வீட்டிற்கு வந்து செல்வார்.
சிறுமி தனது கணவர் ஜான் பாஷாவுடன் சகஜமாக பேசுவதையும், பழகுவதையும் அவரது சகோதரி தவறாக நினைக்கவில்லை. ஆனால் சிறுமியுடன் ஜான் பாஷாவிற்கு தவறான பழக்கம் ஏற்பட்டு, சிறுமியை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார்.
மருந்து கடை
இந்த நிலையில் சிறுமி பொங்கல் அன்று மருந்தகம் சென்று வருவதாக வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக குடும்பத்தினர் கொடுத்த புகாரில் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் செல்போன் நெட்வொர்க்கை ஆய்வு செய்தனர்.
மதுரவாயல்
அப்போது சிறுமி மதுரவாயலில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர். சிறுமி தங்கியிருந்த இடம் ஜான் பாஷாவின் அலுவலகம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 8-ம் வகுப்பு சிறுமியான தனது மனைவியின் சகோதரியிடம் மூளைச் சலவை செய்து அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
ஜான்பாஷா
மேலும் அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு அண்ணா நகர் மகளிர் போலீசாரிடம் மாற்றப்பட்டு சிறுமியை திருமணத்திற்காக கடத்தியது மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜான் பாஷாவை சிறையில் அடைத்தனர்.
மைத்துனியும் மகள்தான்
பொதுவாக மைத்துனியை தனது மகளாகவே பாவிப்பதுதான் அக்காள் கணவரின் எண்ணமாக இருக்க வேண்டும். அதிலும் 13 வயது சிறுமியை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஜான்பாஷா செய்த காரியத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.