சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோகனாவுக்கு நிறைய பேருடன் உறவு.. அதான் கழுத்தை இறுக்கிட்டேன்.. ரயில்வே ஊழியரின் பகீர் வாக்குமூலம்

பெண்ணை எதற்காக கொலை செய்தேன் என்று இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் பயங்கரம்! கள்ள உறவால் பெண் கொலை

    சென்னை: "மோகனாவுக்கு நிறைய பேருடன் உறவு இருந்தது.. அதனால்தான் அவரது கழுத்தை நெறித்தும், மர்ம உறுப்பில் கையால் கொடூரமாக குத்தியும் கொலை செய்தேன்" என்று கள்ளக்காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த தம்பதி ரூக்கேஷ் - மோகனா. இருவருக்கும் ரயில்வே துறையில் வேலை.

    இந்நிலையில், மோகனா, கொருக்குப்பேட்டை யார்டில் ஊழியராக பணியாற்றி வந்தநிலையில், ரயில்வே கேண்டீனில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் வீராசாமியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இந்நிலையில், ரெண்டு பேரும் பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து நேற்று முன்தினம் தங்கினர். அப்போது வீராசாமி வெளியே சென்றுவிட்ட நிலையில், மோகனா, அறைக்குள் நிர்வாண நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட பிணமாக கிடந்தார். இதையடுத்து, வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்ற வீராசாமியை போலீசார் கைது செய்தனர். அப்போது மோகனாவை ஏன் கொலை செய்தார் என்று போலீசாரிடம் சொன்ன வாக்குமூலம் இதுதான்:

    நெருக்கம்

    நெருக்கம்

    ரயில்வேயில் வேலை செய்து வந்த மோகனா, விடிகாலையிலேயேயும், மதியத்திலேயும் என் கேண்டீனில்தான் சாப்பிடுவது வழக்கம். அப்போதுதான் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. அதனால் ஒவ்வொரு வாரமும் லீவு நாளில் ரெண்டு பேருமே சென்னை பெரியமேட்டில் வழக்கமாக ஒரு லாட்ஜ்-ல் ரூம் எடுத்து ஜாலியாக இருப்போம்.

    தொடர்பு

    தொடர்பு

    அப்படித்தான் நேற்று முன்தினமும் வந்தோம். நான் மட்டும் ரூமில் இருந்து வெளியே வந்து தண்ணியும், கஞ்சாவும் அடித்து விட்டு திரும்ப ரூமுக்கு போனேன். அங்கு இருவரும் ஜாலியாக இருந்தோம். மோகனாவுக்கு, நான் மட்டும் இல்லாமல், என்னை போல நிறைய பேருடன் தொடர்பு இருந்தது.

    அறைந்தேன்

    அறைந்தேன்

    அதனால் நான், மோகனாவிடம், உன் புருஷனுக்கு துரோகம் செய்ததுபோலவே எனக்கும் துரோகம் செய்கிறாயே என்று கேட்டேன், அதற்கு மோகனா, அது என் இஷ்டம், இதையெல்லாம் நீ கேட்கக்கூடாது என்று கெட்டவார்த்தையால் என்னை திட்டியதுடன், கால்களாலும் எட்டி உதைத்தார். ஏற்கனவே போதையில் இருந்த நான், இதனால் ஆத்திரம் அதிகமாகி, மோகனா கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்.

    நிர்வாண நிலை

    நிர்வாண நிலை

    என் கைகளால் அவரது கழுத்தை இறுக்கியதுடன், அவரது புடவையாலும், கழுத்தை இறுக்கி கட்டி தாக்கினேன். அப்போதும் என் ஆத்திரம் அடங்காமல், மோகனாவின் மர்ம உறுப்பில் கையால் கொடூரமாக குத்தி கொலை செய்தேன். கடைசியாக நிர்வாண நிலையில், ரூமில் இருந்தஃபேனில் தூக்கில் தொங்க விட்டு, கழுத்தில் கிடந்த 5 சவரன் செயின், கம்மல், மூக்குத்தியை கழட்டி கொண்டு அறையையும் பூட்டிவிட்டு தப்பிசென்றேன்" என்றார்.

    English summary
    Man confessed to Chennai Police about girl friend murdered in Periyamadu Lodge case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X