அதிமுக கூட்டணியில் முரசு ஒலிக்கும்… அமைச்சர் செல்லூர் ராஜு நம்பிக்கை
சென்னை: மா, இலை, தாமரை என இயற்கையாக அமைந்த கூட்டணி நிச்சயம் முரசு ஒலிக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைப்பதால் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதாக அர்த்தமில்லை என்றார்.
அ.தி.மு.க. கூட்டணி ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருப்பதாகத் தெரிவித்த அவர், கட்சிகளுடன் கலந்தாலோசிக்க அதிக நாட்கள் தேவைப்படுகிறதே தவிர அதனை இழுபறி என்று எடுத்துக்கொள்ள கூடாது என்றார்.
மேலும், அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கூட்டணி என்றும் தேமுதிக தங்களது கூட்டணியில் இணையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, ரூ.2000 எதற்காக கொடுத்தாலும் ஏழைகளுக்குத்தானே தருகிறோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்திருந்தார்.