சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் புது திருப்பம்.. ஹைகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்கிறார் மணிகண்டன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Pollachi News: பொள்ளாச்சி வழக்கில் ஹைகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்கிறார் மணிகண்டன்- வீடியோ

    சென்னை: பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் மணிகண்டன் என்பவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பெயரில் சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    High Court

    இந்த நிலையில், மணிகண்டன் என்பவர் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்திருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பொள்ளாச்சி பலாத்காரம்.. என்னை தொடர்புபடுத்தி மோசடி பிரச்சாரம்.. பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு பொள்ளாச்சி பலாத்காரம்.. என்னை தொடர்புபடுத்தி மோசடி பிரச்சாரம்.. பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

    இந்த மணிகண்டனும் போலீசாரால் தேடப்படுவதாகவும், எனவேதான் இவர் முன்ஜாமீன் கோரியதாகவும் தெரிகிறது.

    ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன், இன்று அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    An youth called Manikandan has filed a petition for anticipatory bail in Chennai High Court over Pollachi rape case, and the court asking Tamilnadu government to submit full report on the on this case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X