கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தின் மணிக்குமார் நியமனம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமாரை கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரிஷிகேஷ் ராய், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் காலியான கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி மணிக்குமாரை நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம், பரிந்துரைத்திருந்தது.
கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி மணிக்குமாரை, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணைச் செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
English summary
The Madras High Cour Senior Judge S Manikumar has been elevated as the Chief Justice of the Kerala High Court.