விஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர்
விஜயகாந்த்தை நடிகர் மன்சூர் அலிகான் புகழ்ந்து பேசி உள்ளார்
Recommended Video
சென்னை: "விஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவர் இப்படியெல்லாம் பேச மாட்டார், எங்கே வெளியே வந்து அவரை நாலே நாலு வார்த்தை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்" என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
தன் கடினமான உழைப்பால் முன்னேறிய விஜயகாந்த், 32 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தது பொற்காலம் என்று பலர் இன்றும் சொல்லி வருகிறார்கள்.
எத்தனையோ நடிகர்களையும் அறிமுகம் செய்தவர்தான் விஜயகாந்த். அதில் ஒருவர் நடிகர் மன்சூரலிகானும் ஆவார். இன்று, அரசியல் ரீதியாக இருவரும் மாறுபட்டு உள்ளனர் என்றாலும், விஜயகாந்த் மீதான பாசத்தையும், நன்றியையும் இன்றும் மன்சூர் வைத்துள்ளார்.
அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்
நீட் தேர்வு
இந்நிலையில், விஜயகாந்த் நேற்று முன்தினம் நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கையில், அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும், ஒரே மாதிரியான மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும்" என்றும் தெரிவித்திருந்தார்.
அறிக்கை
அதாவது நீட் தேர்வை ஆதரித்து விஜயகாந்த் கருத்து சொல்லி இருந்தார். இதனை தமிழிசை சவுந்தராஜன் மட்டும்தான் வரவேற்றிருந்தாரே தவிர, விஜயகாந்த் பெயரில் வெளியான அந்த அறிக்கை பல தரப்பினருக்கு அதிர்ச்சியை தந்தது. இது சம்பந்தமான மன்சூரலிகானிடம் பிரபல நாளிதழான நக்கீரன் சார்பில் கருத்துகேட்கப்பட்டது. அப்போது நக்கீரனுக்கு மன்சூர் அளித்த பதில்தான் இது:
கெடுக்காதீங்க
"விஜயகாந்த் எதுக்கு நீட்டை ஆதரிக்கிறார்? அவர் எத்தனை படம் எடுத்திருக்கிறார்? அவர் படமெல்லாம் பாத்தீங்க இல்லை? அவர் இந்த மாதிரி திட்டத்தையெல்லாம் ஆதரிக்கிறவரா? விஜயகாந்த்தின் நல்ல பெயரை கெடுக்காதீங்க. என்னைப்போல நூற்றுக்கணக்கான கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
விரட்டுவோம்
ஏராளமான சாதனைகள் செய்திருக்கிறார். ஏழைகள் பக்கம் நின்ன மனுஷன் அவர். அப்படிப்பட்ட விஜயகாந்த் இப்படி பேசுவாரா? வெளியே வந்து அவரை நாலே நாலு வார்த்தை சொல்ல சொல்லுங்க. நீட் தேர்வு அரசியல் இல்லாம வேற என்ன? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நீட்டை விரட்டுவோம்" என்றார்.