தொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்
திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் குழந்தைகள், பொதுமக்களுடன் சேர்ந்து ஆடல், பாலுடன் பொங்கல் கொண்டாடினார்.
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் இன்று பம்மலில் குழந்தைகள் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். ஆடல், பாடல் என்று அமர்களப்படுத்திய மன்சூர் அலிகான், முழு கரும்பை தனது தொடையில் உடைத்து குழந்தைகளுக்கு கொடுத்து குஷிப் படுத்தினார்.
Recommended Video
தமிழர் திருநாளாம பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் மாட்டுப்பொங்கலும், சனிக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பல்லாவரத்தை அடுத்த பம்மல், திருவள்ளுவர் தெருவில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை பம்மல் ஏ.கே.சி நண்பர்கள், டாக்டர்.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம், சிலம்பம் குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மன்சூர்அலிகான் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினார்.
விழாவிற்கு வந்த மன்சூர் அலிகானுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு கொடுத்தனர். தை பொங்கலும் வந்தது பாடலுக்கு நடனமாடி எல்லோரையும் மகிழ்வித்தார் மன்சூர் அலிகான். குழந்தைகளுடன் நடனமாடிய மன்சூர் அலிகான் ஒரு முழு கரும்பை அசால்டாக உடைத்து குழந்தைகளுக்கு கொடுத்து குஷிப்படுத்தினார். பொங்கல் பானையை கிண்டி விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர்அலிகான் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொரோனாவினால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அவர்கள் மீது மீண்டும் ஒரு சுமையாக சமையல் கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுகிறது. தங்கம் விலை உயர்வு, உயர்ந்து வரும் தங்கம் விலையால் ஏழை பெண்களின் திருமணம் கனவாக உள்ளது என குற்றம் சாட்டினார்.