கஜா புயல் நாளை கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை.. பல ரயில்கள் ரத்து
Recommended Video
சென்னை: கஜா புயல் நாளை, பாம்பன்-கடலூர் நடுவே, கரையை கடக்க உள்ளதால், ராமேஸ்வரம் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் சேது விரைவு ரயில் நாளை மானாமதுரை- ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.
ஓகா-ராமேஸ்வரம் ரயில் நாளை, மதுரை வரை இயக்கப்படும். ராமேஸ்வரம்-ஓகா ரயில், நாளை மறுநாள், மதுரையில் இருந்து இயக்கப்படும்.
இதேபோல, கஜா புயல் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் ரயில் இரு மார்க்கத்திலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
[யானைக்கே கூடும் யானை பலம்.. நாகையில் கடல் மட்டம் உயரும்.. தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்]
ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.