ட்விட்டரில் வார்த்தை மோதலில் ஈடுபடும் அமைச்சர் செந்தில் பாலாஜி - மாரிதாஸ்! மாறி மாறி தாக்கு
சென்னை : நிலக்கரியை காணவில்லை என்ற எழுத்தாளர் மாரிதாஸின் பதிவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்த போது, செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவு வேண்டும் என்று கூறினார். அப்போது அப்புறம் அண்ணா
whiteBoard தவறில்லைமாறி மாறி கட்சி தாவி footboard போடுவது தான் தவறு என்ற பதில் அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்திலுள்ள நிலக்கரி கிடங்குகளை வெள்ளிக்கிழமை அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியளர்களிடம் பேசும் போது , கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஏகப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் சரிசெய்யப்படும் என ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம்.
2.38 லட்சம் டன் நிலக்கரி எங்கே?... தவறு யார் செய்தாலும் நடவடிக்கை பாயும் என்கிறார் செந்தில்பாலாஜி

அதிமுக அரசு
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணம், சரியான வழியில் பயன்படுத்தப்பட்டு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மின்வாரியத்தில் இவ்வளவு பெரிய தவறுகள் நடந்திருப்பது, கடந்த அதிமுக அரசை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது.

தப்பிக்க முடியாது
தவறு இழைத்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. மின்வாரியத்தில் நன்றாக உழைக்கக்கூடிய அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி இழப்புக்கு, வட்டி செலுத்தும் அளவுக்கு மின்வாரியம் உள்ளது. மோசமான நிர்வாகத்திலிருந்து மின்வாரியத்தை மீட்டெடுத்து, வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுக்கும்.

நிலக்கரி காணவில்லை
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. இதில் குற்றம்புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் . ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் மாயமானது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திமுக ஆட்சியில் காணவில்லை
இந்நிலையில் எழுத்தாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக ஆட்சிக்கு வந்த 100நாளில் முக்கிய சாதனை மின்வாரியத்திலிருந்து 2லட்சம் டன் நிலக்கரி காணவில்லை. தகவல் கசிந்ததும்;திமுக அமைச்சர் நிலக்கரி காணவில்லை என்று இன்று பேட்டி கொடுக்கிறார். அது சுமார் 20நாள் தேவையான நிலக்கரி , தினமும் update செய்ய வேண்டிய தகவல் திடீர் என எப்படி மாயம்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அடிப்படை அறிவு வேண்டும்
மாரிதாஸின் இந்த பதிவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் தனது பதிவில், "அன்பு தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அதிமுக ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு. அறமும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள் தான், இல்லாததை இருப்பதாக White boardல் update செய்துக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்.

புட்போர்ட்
இதற்கு பதிலடி கொடுத்த மாரிதாஸ், அன்பு அண்ணன் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்குத் தவறு செய்தது அதிமுக என்றாலும் அதிகாரி என்றாலும் பிடிச்சு உள்ள போடுங்கள் மக்கள் வரவேற்கிறோம். அப்புறம் அண்ணா whiteBoard தவறில்லை மாறி மாறி கட்சி தாவி footboard போடுவது தான் தவறு. அடுத்த whiteBoard வீடியோ பதிலளிக்கத் தயாராகவும் என்று கூறினார்.